இந்த உலகத்தின் முடிவு நெருப்பால் தான் என்பது சிலருடைய கருத்தாகவும்,இல்லை உறை நிலையில் தான் என்பது சிலருடைய கருத்தாகவும் இருக்கிறது .ஆனால் இந்த பிரபஞ்சத்தின் உண்மையான விதி , அது உறை நிலையாக மாறும் என்பதே நோபெல் பரிசு பெற்றிருப்பவர்களின் கருத்து .
அவர்கள் மிகத்தொலைவில் உள்ள பால் வீதியில் சூப்பர் நோவா எனப்படும் வெடிப்புக்கு உள்ளாகும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக அவதானித்து இந்த அண்டம் விரிவடையும் வேகம் அதிகரித்து வருகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் .
இந்த கண்டுபிடிப்பு அவர்களுக்கே பெரும் அதிர்ச்சியை தந்தது . அவர்களின் அதிர்ச்சிக்கான காரணத்தை இலகுவாக விளக்குவதானால், உதாரணமாக ஒரு பந்தை மேலே எறிந்தால் புவியீர்ப்பு விசையால் கீழே வந்து சேரும் . ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு கிட்டத்தட்ட ஒரு பந்தை மேலே எறிந்து விட்டு ,புவியீர்ப்பு விசையால் அதன் திசையை கூட மாற்ற முடியாமல் அது இன்னும் இன்னும் மேலே போய் காணாமல் போகும் நிகழ்வை அவதானிப்பதை போல இருந்திருக்கும் .
கிட்டத்தட்ட இதே நிகழ்வு தான் எமது அண்டத்திலும் நிகழ்கிறது .
இந்த அண்டத்தின் விரிவடையும் போக்கின் அடிப்படையை பார்த்தால் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியால் வெளிநோக்கி தள்ளப்படுகிறது என்பது தெரிகிறது .இந்த பிரபஞ்சத்தின் 70 % கண்ணுக்கு தெரியாத சக்தி எனப்படும் Dark energy யால் ஆனது . இதுவரை காலமும் இயற்பியலில் புரியாத புதிராக இருந்து வருவது இதுவே .
1998 இல் இரு ஆராய்ச்சி அணிகளும் ஒரே முடிவை முன் வைத்த போது அண்டப் படைப்பு கோட்பாடு(cosmology) கொஞ்சம் ஆட்டம் கண்டது எனலாம்

























