Text Resizer: Click for Resizer
அலெக்சாண்டர் பிளெமிங்,பென்சிலின் என்ற நோய் எதிர்ப்பு (Antibiotic )மருந்தை கண்டுபிடித்தார்.இரண்டாம் உலகப்போரின் போது ஆயிரம் உயிர்களை இவரது மருந்து காப்பாற்றியது .
1906 இல் லண்டனில் படிப்பினை முடித்த பிளெமிங் ,இராணுவ வைத்திய குழுமத்தில் (Army Medical corporation ) இல் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார் . முதலாம் உலகப்போருக்கு பிறகு லண்டனில் இருந்த சென் மேரீஸ்(St .Mary 's)மருத்துவ கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
பிளெமிங் இன் மூத்த சகோதரர் மருத்துவர் தான் தம்பியும் தன்னைப்போல மருத்துவர் ஆக வேண்டும் என்று அவர் ஆசைபட்டார் .பிளெமிங் ஆராய்ச்சி துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் மருத்துவ படிப்பு படிக்கவில்லை .
1928 ஆம் ஆண்டு பிளெமிங் தனது ஆராய்ச்சி கூடத்தில் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார் . ஆனால் ,எல்லா ஆராய்ச்சியும் குழப்பமாகவே இருந்து வந்தன .ஒரு முறை பிளெமிங் நெடுநாள் வெளியூருக்கு பயணம் சென்று தன்னுடைய ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தார் . அங்கு இருந்த உணவுப் பொருட்களில் காளான் வந்திருந்தது . இந்த காளான்கள் உணவு பொருட்களை சேதப்படுத்தியதை உணர்ந்தார் . காளான்கள் படிந்திருந்த உணவுப்பொருட்களை தனியாக எடுத்தார் . காளான் பாதிக்கபடாத உணவுப்பொருட்களை தனியாக ஆராய்ச்சி செய்து பார்த்தார் .அதில் பென்சீலியம் என்ற பக்டீரியாக்கள் இருந்தது. பென்சிலீயம் பக்டீரியாக்கள் இருந்ததால் இந்த உணவுப்பொருட்களை சேதப்படுத்த முடியவில்லை என்று உணர்ந்த ப்ளேமிங்குக்கு காளான்கள் வளர்ச்சியை தடுக்க பென்சிலின் பாக்டீரியாக்களை உருவாக்கினார் .தான் கண்டுபிடித்த மருந்தின் பெயரை பென்சிலின் என்று பெயர் வைத்தார் .மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு பென்சிலின் உதவியது .
1945 இல் அலெக்சாந்தர் பிளெமிங் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கபட்டார் .இவருடைய பென்சிலின் மருந்தின் அடிப்படையில் ஐசோ லேட் பென்சிலின் என்ற மருந்தும் கண்டுபிடிக்க உதவியது.
தன் கண்டுபிடிப்பால் பல உயிர்களை வாழவைத்த அலெக்சாண்டர் பிளெமிங் தனது 73 வயதில் காலமானார் .
அலெக்சாண்டர் பிளெமிங் கண்டுபிடித்த பென்சிலின் இன்று பல அறிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது . அவர் கண்டுபிடித்த பென்சிலின் மருந்து பல கோடி உயிர்களை இன்னும் காப்பாற்றிகொண்டிருக்கிறது .










No comments:
Post a Comment